மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு என தொடர்ந்து மலையாள படங்கள் மொழிகளை கடந்து வெற்றிப் பெற்று வரும் நிலையில், "மலையாள சினிமாவைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது" என்று பிரபல இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
மலையாள பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் தயாரிப்பில் கிரீஷ் இயக்கத்தில் மமிதா பைஜூ, நஸ்லென் நடிப்பில் பிரேமலு திரைப்படம் கடந்த பிப்.9ம் தேதி வெளியானது. இப்படம் மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியானது. இளம் தலைமுறையின் காதலும், நகைச்சுவையும் மிகச்சிறந்த திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்து வருகிறது. அதனால், ஒரு மாதம் கடந்தும் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், ரூ.100 கோடியை கடந்து வசூல்மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், இன்று பிரேமலு படத்தின் தமிழ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் 15ம் தேதி முதல் தமிழில் இப்படம் வெளியாகிறது. படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
பிரேமலு படத்தின் தெலுங்கு பதிப்பை, இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திக்கேயா வெளியிட்டிருந்தார். தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்ததால், பிரேமலு படத்தின் வெற்றிவிழா, ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இயக்குநர் ராஜமெளலி கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். முக்கியமாக மலையாள திரையுலகம் குறித்து பாராட்டி பேசியிருந்தார்.
அப்போது பேசிய அவர், “நல்ல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை மலையாள திரையுலகம் உருவாக்கி வருகிறது. மலையாள படத்தின் கதை மற்றும் படமாக்கும் நேர்த்தியை பார்த்து பொறாமையாக இருக்கிறது. பிரேமலு படம் மிகவும் பிடித்து இருந்தது. படம் முழுவதும் ரசித்து பார்த்தேன். அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். இந்த படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். சமீபத்தில் பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், "மலையாள திரைக்கலைஞர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது" என்று பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
திமுக எம்எல்ஏ-வின் சேலையில் பற்றிய தீ... குஷ்பு படத்தை கொளுத்திய போது விபரீதம்!
மாஸ் வீடியோ... விஜய் வழியில் சிவகார்த்திகேயன்... அரசியலுக்கு அச்சாரம் போடும் மெகா திட்டம்?!
சச்சினின் 30 ஆண்டுகால சாதனை முறியடிப்பு... இளம் வீரர் முஷீர் கான் அபாரம்!
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பரபரப்பு... பெல்லாரியில் சிக்கியது குற்றவாளியா?
திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி... வார்டு புறக்கணிக்கப்படுவதாக புகார்!