‘எஸ்.டி.ஆர் 49’ படத்தின் பணிகளை படப்பூஜையுடன் தொடங்கியிருக்கிறது படக்குழு.
சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி ஒன்றில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது படக்குழு. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தினை இரண்டு கட்டமாக முடிக்கவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
ராம்குமார் தயாரிப்பில் சிம்பு, கயாடு லோஹர், சந்தானம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக சாய் அபயங்கர், எடிட்டராக பிலோமின் ராஜ் ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள். ‘பார்க்கிங்’ படத்துக்குப் பிறகு ராம்குமார் இயக்கவுள்ள படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
‘எஸ்.டி.ஆர் 49’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, தேசிங்கு பெரியசாமி மற்றும் அஸ்வத் மாரிமுத்து ஆகியோரது படங்களை ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கிறார் சிம்பு. இந்த இரண்டு படங்களையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.