சென்னை: “எனது வெற்றி, தோல்வி அனைத்திலும் துணையாக இருந்தவர் ஷாலினி” என்று அஜித் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு ஏப்ரல் 28ம் தேதி பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பத்ம பூஷண் விருது வென்றதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள முன்னணி நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் அஜித்.
அதில், மனைவி ஷாலினி குறித்த கேள்விக்கு அஜித், “அனைவருக்கும் அவரைத் தெரியும். ஷாலினி மிகவும் பிரபலமானவர். அவரது ரசிகர்களால் நேசிக்கப்பட்டவர். என் வெற்றி, தோல்வி என அனைத்திலும் துணையாக நின்றவர் ஷாலினி. அவரைத் திருமணம் செய்தபோது பிரபலமான நடிகையாக இருந்தார்.
என் முடிவுகள் தவறாக இருக்கும் போதெல்லாம் என்னை பின்னிருந்து தாங்கிப் பிடித்தது அவர்தான். இன்னும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். கடினமான காலங்களில் என் பக்கத்திலேயே இருந்தார். என் வாழ்க்கையில் சாதித்த அனைத்துக்கும் பாராட்டுகளைப் பெறத் தகுதியானவர்” என்று கூறியிருக்கிறார் அஜித்.