பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.19, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும்.
மிதுனம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும்.
கடகம்: அடிமனதிலிருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
சிம்மம்: எடுத்த வேலையை திறம்பட செய்து முடிப்பீர்.
கன்னி: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.
துலாம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
விருச்சிகம்: பழைய நண்பர்கள் தேடி வருவர்.
தனுசு: வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள்.
மகரம்: பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர்.
கும்பம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.
மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)