காணிகளுக்குப் பிடித்த ஏறுமாடவாசம்!
என்.சுவாமிநாதன்
அந்த வீட்டுக்குச் சென்ற கணத்தில் ஆச்சரியப்பட்டு போனேன். வீட்டில் ஊஞ்சல் கட்டியும், குளு, குளு ஏ.சி அறைகளிலும் ஓய்வெடுப்பவர்களைப் பார்த்திருப்போம். வீட்டுக்குப் பின்னால் மரத்தில் கூடுகட்டி வசிப்பவர்களைப் பார்த்திருக்கிறோமோ? சுரேஷ் சுவாமியார் காணி அப்படித்தான் கூடுகட்டி வசிக்கும் பறவையைப் போல குதூகலமாக வசித்துக் கொண்டிருக்கிறார்!